Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் திருட்டுத்தனமாக நம்மை சூழ்ந்து கொண்டது… வெளியே வராதீர் – தலைமை நீதிபதி சாஹி எச்சரிக்கை!

உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 43000த்தை தாண்டி உள்ளது. உலகளவில் கொரோனாவால் 8,72,447 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1,84,482 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637ஆக உயர்ந்துள்ள நிலையில் 38 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பயணம் தொடங்கியது என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் . வீட்டை விட்டு வெளியே வந்து மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளியே வந்து நடமாடுவதால் கொரோனா ஆபத்து அதிகரிக்கும்.

வெளியில் நடமாடுவதால் நமக்கு தெரியாமல் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என்பதால் வெளியே வர வேண்டாம் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டாம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் திருட்டுத்தனமாக நம்மை சூழ்ந்து கொண்டது. குறைத்து மதிப்பிட்டதால் தான் வளர்ந்த நாடுகள் பல கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நடமாட்டமும், தொடர்பும் தான் கொரோனா வைரஸ் பரவ முக்கிய காரணம் என ஊரடங்கை மீறி நடமாடுவோருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி எச்சரித்துள்ளார்.

Categories

Tech |