இராம நவமி பற்றியும் ராமரின் பிறப்பு மற்றும் அவரின் ராஜ்ஜியம் பற்றியும் அறிவோம். வரலாறாக..!!
கோசலை நாட்டை அதன் தலைநகராகிய அயோத்தியிலிருந்து ஆட்சி செய்த தசரதச் சக்கரவத்தியின் மூத்த மகன் இராமன் ஆவார். இவர் விஷ்ணு பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பி வழிபடப்படுகிறார். இத்தகைய தெய்வீகத் தன்மை கொண்ட இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்து சமய விழாவே இராமநவமி ஆகும். அந்த நாள் ஸ்ரீ இராம நவமி என்றும் வழங்கப்படுகிறது.
இவ்விழா ‘சுக்ல பட்ச’ அல்லது வளர்பிறையில் இந்து சந்திர ஆண்டின் சித்திரை மாதத்தில் ஒன்பதாம் நாள் வரும் நவமியில் கொண்டாடப்படுகிறது. அதனால் இது சித்திரை மாத சுக்லபட்ச நவமி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் ஒன்பதாம் நாளின் இறுதியில் சித்திரை-நவராத்திரி கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் நவராத்திரிகளின் அனைத்து ஒன்பது நாட்களும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆகையால் அந்தக் காலகட்டம் ‘இராம நவராத்திரி’ எனப்படுகிற
இராமநவமிக் கொண்டாட்டம்:
இந்து இதிகாசமான இராமாயணத்தின் கதாநாயகன் இராமர் ஆவார். இது தொடர் விவரக் குறிப்புகளான அகண்ட பாதம் மூலமாகக் குறிப்பிடப்படுகிறது. இவ்விழாவில் பூஜை மற்றும் ஆரத்தி முடிந்த பிறகு பிரசாதம் வழங்கப்படும். தொடர்ந்து விமரிசையான பஜனை மற்றும் கீர்த்தனைப் பாடல்கள் பாடுதல் நிகழும். இவற்றோடு பல நாட்களுக்கு முன்பே பெரும்பாலும் இராமச்சரிதமனாஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அந்த நாளில் அது மிகவும் உச்சமடைந்திருக்கும்.
குழந்தை இராமனின் உருவப்படங்கள் தொட்டிலில் வைக்கப்பட்டு, பக்தர்களால் முன்னும் பின்னும் ஆட்டப்படும்.. இராமபிரான் நிலவில் பிறந்தவராக நம்பிக்கை உண்டு. இக்கொண்டாட்டத்திற்காக. கோவில்கள் மற்றும் குடும்ப அமைப்பிலான சிறுமடங்கள் ஆகியன விரிவாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். மேலும் காலை நேரத்தில் வழக்கமான பிரார்த்தனைகள் இடம்பெறும்.
மேலும் கோவில்களில் கனிகளும் மலர்களும் தானமாக வழங்கப்படும். வேத மந்திரங்கள் ஓதப்படுவதோடு சிறப்பு ஹாவன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். பெரும்பாலான இந்துக்கள் அந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவர். மாலையில் விரதம் நிறைவுறும். இவ்வேளையில் கொண்டாட்டங்கள் உச்சமடைந்திருக்கும். உத்திரபிரதேச மாநிலத்தின் சாப்பையா கிராமத்தில் பிறந்த பகவான் சுவாமிநாராயணின் பிறந்த நாளான சுவாமிநாராயண் ஜெயந்தி, இராம நவமி தினத்திலேயே வருகிறது.
அயோத்தியில் இராமநவமி:
அன்றைய தினத்தில் உத்திரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பத்ராச்சலம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் ஆகிய இடங்களில் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறும். பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு குழுமுவார்கள். மேலும் இராமர், அவரது மனைவி சீதா, தம்பி லட்சுமணன் மற்றும் பக்தர் ஹனுமான் ஆகியோரின் ஷோபயாத்திரைகள் ரதயாத்திரைகள், தேர் ஊர்வலங்கள் பல்வேறு இடங்களில் நடைபெறும். அயோத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நதியாகக் கருதப்படும் சராயுவில் மூழ்கி எழுந்து வழிபடுவார்கள்.
இராமபிரான் அவதரித்த விதம்:
இராமாயணத்தில், அயோத்தி அரசரான தசரதருக்கு கோசலை, சுமித்ரா கைகேயி ஆகிய மூன்று மனைவிகள் இருந்தும் அவர்களுக்கு ஆண் குழந்தை இல்லை என்பது பெரும் கவலையாக இருந்தது. அடுத்த பட்டத்திற்கு அரியணையில் அமர்வதற்கு அவர்களுக்கு வாரிசு இல்லாமல் இருந்தது. இதனால் தசரதன் வருந்தினார்.
வசிட்ட முனிவர் அவரிடம் விரும்பிய குழந்தையைப் பெற புத்திர காமேஸ்டி யாகம் செய்யச் சொன்னார். அந்த யாகத்தைச் செய்வதற்காக ருசிய சிருங்க முனிவரையும் அழைத்துக் கொள்ளச் சொன்னார். உட னே தசரதர் ருசிய சிருங்க முனிவரை அழைப்பதற்காக அவரது ஆசிரமம் சென்றார். மகரிஷி அந்த யாகத்தை தசரதருடன் இணைந்து அயோத்தியில் அவதாவின் தலைநகரில் செய்வதற்கு ஒத்துக் கொண்டார்.
அந்த யாகத்தின் விளைவாக யக்னேஸ்வரன் தோன்றி பாயாசம் நிறைந்த ஒரு கிண்ணத்தைக் கொடுத்து அதனை அவரது மனைவிகளுக்குக் கொடுக்கும்படி தெரிவித்தார். தசரதர் அதில் சரிபாதியளவு பாயசத்தை அவரது மூத்த மனைவி கோசலைக்கும், மற்றொரு சரிபாதியை அவரது இளம் மனைவி கைகேயிக்கும் கொடுத்தார். அவர்கள் இருவரும் அவர்களது பங்கில் பாதியைச் சுமித்ராவுக்குக் கொடுத்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு மூன்று அரசிகளும் கருவுற்றனர். சித்திரை மாதத்தின் (இந்து நாட்காட்டியில் இறுதி மாதம்) ஒன்பதாம் நாளில் (நவமி), உச்சிவேளையில் கோசலை ஸ்ரீ இராம பிரானையும், கைகேயி பரதனையும் சுமித்ரா லட்சுமணன் மற்றும் சத்ருகனன் என்ற இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்தனர்.
இராம பிரான், விஷ்ணு பகவானின் ஏழாவது அவதாரம் ஆவார். இவ்வுலகில் அதர்மம் தர்மத்தை மீறிச் செல்லும் போது பூமியில் வந்து அவதரித்து அதர்மத்தின் வேர்களைத் தோல்வியுறச் செய்து அனைத்து பக்தர்களையும் காப்பார் என்பதே அவதாரத்தின் அடிப்படை. அவ்வகையில் இராமபிரான், இராவணன் என்ற அரக்கனை அழிப்பதற்காக பூமியில் அவதரித்திருந்தார்.
இராமராஜ்யம்:
இராமரின் வழிகாட்டலில் நடைபெறும் ஆட்சியான இராமராஜ்யம் அமைதி மற்றும் செழிப்புடன் கூடிய காலகட்டமாக இருந்தது. மகாத்மா காந்தியும் கூட அவரைப் பொறுத்தவரை சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை விவரிப்பதற்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்.
இராம நவமி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வருகிறது. அதிகாலையில் சூரியனைத் தொழுவதுடன் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கின்றன. மதியத்தில் இராமபிரான் பிறந்த நேரத்தின் போது சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக வட இந்தியாவில் இராம நவமி ஊர்வலம் மிகவும் பிரபலமான நிகழ்வாக இருக்கிறது.
இந்த ஊர்வலத்தில் முக்கிய ஈர்ப்பாக இராமர், அவரது சகோதரர் லட்சுமனன், அவரது ராணி சீதா மற்றும் அவரது சீடர் ஹனுமன் ஆகிய நால்வர் போன்று வேடமிட்ட நபர்கள் மகிழ்வுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வலம் வருவார்கள். அந்தத் தேரில் பல்வேறு மற்ற நபர்கள் இராமரின் படை வீரர்களாக பழங்கால உடைகளில் வேடமிட்டு இடம்பெற்றிருப்பார்கள். அந்த ஊர்வலத்தில் பங்கு பெறுபவர்கள் இராமரின் ஆட்சி காலத்தின் மகிழ்ச்சியான நாட்களைப் பிரதிபலிக்கும் விதமாக மிகுந்த கொக்கரிப்பை வெளிப்படுத்திவருவார்கள்.
இராமனின் பிறப்பு சார்ந்த விவரம்:
வால்மீகி அவரது சமஸ்கிருத உரை இராமாயணத்தில், இளம் இராமரின் பிறப்பு சார்ந்த அல்லது பிறப்பு விவரத்தை விவரித்திருக்கிறார். மேலும் அந்த நாள் இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்தியச் சமூகங்கள் முழுவதும் இராமநவமி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.