என்னிடம் கடினமான கேள்வியை கேளுங்கள் என்று சென்னை கல்லூரி மாணவிகள் கலந்துரையாடலில் ராகுல் காந்தி தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலையடுத்து திமுக கூட்டணி சார்பில் இன்று நகர்க்கோவிலில் நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தை தொடங்குகின்றார் . இதில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி_யில் இருந்து ராகுல் காந்தி தமிழகம் வந்தார்.
இந்நிலையில் இன்று காலை சென்னை வந்த ராகுல் காந்தி காலை 11.30 மணிக்கு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சேஞ்ச் மேக்கர்ஸ் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட ராகுல்காந்தி மாணவிகளுடன் கலந்துரையாடினார். இதில் ராகுல் காந்தி மாணவிகளிடம் என்னிடம் சுலபமாக இல்லாமல் கடினமாக கேள்விகளை கேளுங்கள் மேலும் என்னை யாரும் சார் என்று அழைக்க வேண்டாம், ராகுல் என்றே பெயரை சொல்லி அழையுங்கள் என்று கூறி மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.