கர்நாடக மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இனி வீட்டை விட்டு எங்கேயும் தப்பிக்க முடியாதவாறு அம்மாநில அரசு புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவில் உருவாகி உலகையே அச்சுறுத்தி வருகிறது கொ ரோனா வைரஸ். இந்த வைரஸ் இதில் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா வைரசால் நாட்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இதைக் கட்டுப்படுத்த கர்நாடகா அரசு ஒரு புதிய யுக்தியை கையாண்டுள்ளது. அதாவது, ஒரு செயலி ஒன்றை அம்மாநில அரசு உருவாக்கியுள்ளது. அதில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் தங்களது சுய புகைப்படத்தை 1 மணி நேரத்திற்கு ஒரு முறை பதிவிட வேண்டும். அப்படி யாராவது அந்த செயலியில் பதிவிடாமல் தவறினால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அரசு தனிமைப்படுத்தப்பட்ட அரங்குக்கு மாற்றப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் புகைப்படங்கள் எந்த நேரத்தில், எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் கவனிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.