Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

“என்னை எப்போதும் பெருமைப்படுத்துகிறார் அக்ஷய்”… ட்விட் செய்த மனைவி!

நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கண்ணா கணவரின் சேவையைப் பாராட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது. இந்தியாவில் இதுவரை 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

Twinkle Khanna reveals why hubby Akshay Kumar gave 25cr to PM ...

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், அரசுக்கு உதவ நாட்டு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள்விடுத்தார். பிரதமரின் அந்தக் கோரிக்கையை ஏற்று திரையுலக பிரபலங்கள் பலரும் நிதியுதவி வழங்கிவருகின்றனர். அந்தவகையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தேசிய நிவாரண நிதிக்காக ரூ.25 கோடி வழங்கினார்.
Twinkle Khanna reveals why husband Akshay Kumar gave Rs 25cr to PM ...

இது குறித்து அவரின் மனைவியும், எழுத்தாளருமான ட்விங்கிள் கண்ணா (twinkle khanna) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “இந்த மனிதர் என்னை எப்போதும் பெருமைப்படுத்துகிறார். இது ஒரு பெரிய தொகை என்பதால் இதுகுறித்து அக்ஷய் குமாரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார், திரைத் துறைக்கு வருவதற்கு முன் என்னிடம் ஒன்றுமே இல்லை, ஆனால் தற்போது நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன்..  எதுவும் இல்லாதவர்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்வதிலிருந்து நான் எவ்வாறு பின்வாங்க முடியும் என்றார்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |