கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் 14 பேர் பலி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொலம்பியா நாட்டில் உள்ள அமேசான் பகுதியில் இருக்கும் சான் ஜோஸ் டெல் குவாவிரே நகரில் இருந்து வில்லாவிசென்சியோ நகருக்கு TC-3’ ரக பயணிகள் விமானம் கிளம்பியது . இந்த விமானத்தில் 9 பயணிகள் , 2 விமானிகள் மற்றும் விமான ஊழியர் 3 என பயணம் செய்தனர்.
TC-3’ ரக பயணிகள் விமானம் மேடா மாகாணத்தில் இருக்கும் லா பெண்டிரிசோன் என்ற நகரின் அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, தீடிரென்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . மேலும் இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.