Categories
அரசியல்

பொள்ளாச்சி கொடூரர்கள் மீது கடுமையான நடவடிக்கை……. மாணவர்கள் போராட்டம்…!!

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது .

இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய கொடூரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை நந்தனம் கல்லூரியில்  அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதில் அவர்கள் மத்திய மாநில அரசுக்களை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

Categories

Tech |