தமிழகத்தில் + 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினார்.
இந்நிலையில் 144 தடை உத்தரவு குறித்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அனைத்து கல்லூரி, வேலைய்வாய்ப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன காய்கறிகள், உணவுப்பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் கிடங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கால்நடை தீவன விற்பனை நிலையங்கள், பால் பூத்துகள், வங்கி ஏடிஎம்கள், ஊடக அலுவலகங்கள் செயல்படும் உணவகங்கள், உணவு தயாரிப்புக் கூடங்கள், பார்சல் வழங்க அனுமதி உண்டு. ஆனால் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை
தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் * வரும் 26ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 பொதுத்தேர்வு ஒத்திவைப்பு. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் ஏப்.1 வரை அமலில் இருக்கும் என அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.