Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நாளை மாலை 6 மணி முதல்…. அனைத்து மாவட்டங்களுக்கும் சீல் …. !!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நாளை முதல் 144 தடை உத்தரவை முதல்வர் பழனிசாமி பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மாவட்ட எல்லைகள் மூடப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டத்தை  மத்திய அரசு முடக்க பரிந்துரை செய்த நிலையில் மாவட்டம் அனைத்தையும் முடக்கியது தமிழக அரசு.நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை அமுலில் இருக்கும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி 144 தடை உத்தரவு ஊரடங்காக மாறி நிலையில் தற்போது தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் வெளியே வரலாம்.  அதோடு அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தில் பாதிப்பு இருக்காது.

அத்தியாவசிய பொருள்கள் இயங்க தடை இல்லை. காய்கறி , மளிகை கடைகள் செயல்படும் என்றும் முதலமைச்சர்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |