Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர்களே உஷார்….. டியூஷனுக்கு தடை….. மீறினால் நடவடிக்கை…..!!

பள்ளிகளுக்கு விடுமுறை விட்ட இந்நேரத்தில் மாணவ-மாணவிகளுக்கு டியூஷன் வகுப்பும் எடுக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனோ பாதிப்புக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விடுமுறையில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பது ஸ்பெஷல் கிளாஸ் சிறப்பு வகுப்புகள் ஆசிரியர்கள் தங்களது வீட்டில் நடத்துவது என எதையும் செய்யக்கூடாது.

குழந்தைகள் அவரவர் வீட்டில்தான் இருக்க வேண்டும். மீறி விடுமுறை காலங்களில் டியூஷன் எடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்களது விவரத்தை பள்ளிக் கல்வித் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Categories

Tech |