Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு… தப்பு செஞ்சா “தூக்கு” தான்…!!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது..

டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டு  கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர். குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களில் ஒருவன் சிறுவன் என்பதால் 3 ஆண்டுகள் சிறை பிறகு விடுதலை செய்யப்பட்டான். மிஞ்சிய 5 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராம்சிங்க் என்ற குற்றவாளி சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.மிஞ்சிய  நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30  மணிக்கு திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |