காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் முழுமையாக குணமடைந்து 16ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு கொரோனோ நோய் தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக வந்த தகவலை அடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பூரண குணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்க கடந்த 16ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் மீண்டும் உடல்நிலை சரியில்லாததால் அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மீண்டும் அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளதா ? என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.