புனேவில் 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன் கொடுமை செய்த 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி 6 பேர் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். அதுமட்டுமின்றி இதுபற்றி வெளியே சொன்னால் நிர்வாண புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுவிடுவதாக கூறி சிறுமியை மிரட்டி இருக்கின்றனர்.
இதுகுறித்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் 6 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.