Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு!…. லீவ்ல இருக்கும்போது தொல்லை செய்தால் அபராதம்…. இந்திய நிறுவனம் அதிரடி….!!!!

விடுமுறையில் உள்ள பணியாளரை அலுவலகப் பணி குறித்து யாராவது அழைத்து தொல்லை செய்தால் அவருக்கு ரூபாய்.1 லட்சம் அபராதம் என்று இந்திய நிறுவனம் ஒன்று தெரிவித்து உள்ளது. விளையாட்டில் பான்டஸி வகை போட்டிகளை நடத்தும் Dream 11 என்ற இந்திய நிறுவனம் தான் இந்த பிரச்னை சார்ந்து “Dream 11 Unplug” எனும் புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. இந்த விதிமுறை வாயிலாக பணியாளர் அந்த ஒரு வாரம் முழுவதும் விடுப்பு எடுத்துக்கொள்வது மட்டுமின்றி, மின் அஞ்சல், வாட்ஸ்அப், குரூப் சாட்கள் என அனைத்து வகையிலும் அலுவலகத்திலிருந்து தொடர்பற்று இருக்கலாம்.

இதுகுறித்து Dream 11 நிறுவனர்களான ஹர்ஷ் ஜெயின் மற்றும் பவித் சேத் போன்றோர், “UNPLUG” காலத்தில் வேறொரு பணியாளரை யாரேனும் வேலை செய்ய தொடர்பு கொண்டால், அவருக்கு சுமார் ரூபாய்.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளனர். இந்நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் முதல் அனைத்து பணியாளர்களும் தலா 1 வாரம் நீண்ட விடுமுறை எடுக்க வசதியளிக்கப்பட்டு உள்ளது..

Categories

Tech |