கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள துலாம்பூண்டி கிராமத்தில் ரங்கநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு துளசி(65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த துளசி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துளசி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Categories
தனியாக இருந்த மூதாட்டி தற்கொலை…. என்ன காரணம்…,? போலீஸ் விசாரணை…!!
