சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதித்த தாய், மகளுடன் எந்தெந்த மாவட்டங்களை சார்ந்தவர்கள் பயணித்தனர் என்ற தரவுகள் சேகரிக்கப்படுகிறது. அவர்களுடன் பயணித்த 70 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என சுற்றுலாத்துறை தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில், அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுறுத்தினார். இதுபற்றி அவர், சுற்றுலா தலங்களில் முககவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு முககவசம் வழங்கவும், கிருமிநாசினி வழங்கவும், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.