Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும்…. அரசு திடீர் அவசர உத்தரவு….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு மற்றும் முக கவசம் என பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் இருப்பு டேங்குகளில் 80 சதவீதம் நிரப்பி வைக்க அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 486 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யவும், 1,546 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமிக்கவும் வசதிகள் உள்ளது. தற்போது தினமும் 65 மெட்ரிக் டன் மட்டுமே தேவைப்படுவதால் இருப்பை அதிகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |