Categories
தேசிய செய்திகள்

31- ஆம் தேதி வரை கடும் குளிர் நிலவும்… எந்தெந்த பகுதிகளில்…? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்…!!!!!!

நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. இந்த உறைய வைக்கும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, அடுத்த 48 மணி நேரத்தில் உத்தரகாண்ட், சண்டிகர், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் மேற்கு ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் அடர்த்தியான மூடுபனி நிலவக்கூடும்.

அதேபோல் அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் கடுமையான பனி நிலவு கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சண்டிகர், டெல்லி, மேற்கு ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் வரும் 31-ஆம் தேதி வரை கடும் குளிர் நிலவும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |