Categories
தேசிய செய்திகள்

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்: நாடு முழுவதும் ஜன.,1 முதல் அமல்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு டிஜிட்டல் வருகை பதிவேடு முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஜனவரி 1ஆ-ம் தேதி முதல் டிஜிட்டல் வருகை பதிவேடு அமலுக்கு வருகிறது.

அதாவது நாடு முழுவதும் தொழிலாளர்களின் பணி தொடர்பாகவும், வருகை தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள்  எழுந்ததால் மத்திய அரசு டிஜிட்டல் வருகை பதிவேடு முறையை அமல்படுத்த இருக்கிறது. மேலும் டிஜிட்டல் வருகை பதிவேடு மூலம் தேசிய ஊரக வேலைவாய்ப்பில் உள்ள முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |