இஸ்லாமிய ஆசிரியை ஒருவர் விபத்தில் கால்களை இழந்து தவித்து வந்த கண்ணன் என்பவருக்கு ரூபாய்.8 லட்சத்தில் வீடு கட்டி உதவினார். அந்த ஆசிரியைக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக அவர் நலமாக இருக்க வேண்டி சுமார் 300 கி.மீ தூரம் கண்ணன் வீல் சேரில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளார். கேரள மாநிலம் மலபுரத்தை சேர்ந்த தொழிலாளி கண்ணன் சென்ற 2013 ஆம் வருடம் லாரியிலிருந்து மரக்கட்டைகளை இறக்கும்போது விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த கோர விபத்தில் கண்ணன் தன் இடது காலை இழந்தார்.
இதையடுத்து மனைவி மற்றும் 3 குழந்தைகளின் வாழ்வுக்காக கண்ணன் லாட்டரி சீட்டு விற்கும் தொழிலில் ஈடுபட்டார். அவரது நிலை கண்டு கொண்டோட்டி அரசு கலைக் கல்லூரி பேராசிரியை சமீரா, உதவிக்கரம் நீட்டிஉள்ளார். அதாவது, கண்ணன் வீடு கட்டுவதற்கு ஆசிரியை உதவி புரிந்துள்ளார். அண்மையில் கொண்டோட்டியிலிருந்து தன் பயணத்தை தொடங்கிய கண்ணன், சபரிமலை சன்னிதானத்தை அடைய திட்டமிட்டு உள்ளார்.