Categories
மாநில செய்திகள்

“இதை செய்தால்” துப்பாக்கியால் சுட கூட தயங்கக்கூடாது…. டிஜிபி எச்சரிக்கை…!!!!

நெல்லை மாவட்டத்தில் காவல் அதிகாரிகளை தாக்கினால் துப்பாக்கியால் கூட சுட தயங்கக்கூடாது என அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நெல்லையில் பழிக்குப் பழியாக தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது போலீசாரை தாக்கினால், துப்பாக்கிச் சூடு நடத்தவும் தயங்கக் கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு தமிழக முழுவதும் ரூ. 23 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3967 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கூலிப்படை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Categories

Tech |