Categories
தேசிய செய்திகள்

“இனி இந்த பண பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு தேவையில்லை”?…. வெளியான புதிய தகவல்…!!!!

இந்தியாவில் அனைத்து விதமான பண பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த பான் கார்டு எண்ணை வங்கிக் கணக்கு எண் மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வங்கிகளில் நடைபெறும் மோசடிகள் மற்றும் வரி ஏய்ப்புகள் போன்றவற்றை தடுப்பதற்காக வருமான வரித்துறையினரால் பான் கார்டு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ஆதார் கார்டு இணைக்கப்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயம் என்பதை நீக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு 2023-24 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பண பரிவர்த்தனைகளை எளிமையாக்குவதற்காக இந்த புதிய மாற்றம் கொண்டுவரப்பட போவதாக கூறப்படுகிறது. மேலும் இந்திய வருமான வரிச் சட்டத்தின் படி சில பண பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டுக்கு பதிலாக ஆதார் கார்டு அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |