வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது,”தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 480 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரி கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும். இதனால் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்யும்.
மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். இதனால் தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை கடலோரப் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள் ஆகியவற்றில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்” என அதில் கூறப்பட்டுள்ளது.