Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு… வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறப்பு…!!!!!!!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி விளங்குகிறது. இந்த ஏரியில் மழை நீர் பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மாபள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், மேலும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டனூர் அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல்  மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கமாகும். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அதிகரித்தது.

கடந்த 9-ம் தேதி அணையின் பாதுகாப்பை கருதி பூண்டி ஏயிரில் இருந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில்  திறந்து விடப்பட்டுள்ளது. 12-ஆம் தேதி பூண்டியிலிருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நேற்று செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. பூண்டி ஏரியில் 3.231 டி.எம்.சி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். ஆனால் தற்போது ஏரியில் 2.839 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,280 கன அடியாக வந்து கொண்டிருந்தது.

Categories

Tech |