Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகள் என்று பாராது…. 4 வருஷமா தந்தை செய்த கொடூர செயல்…. வெளிச்சத்திற்கு வந்த உண்மை…. போலீஸ் அதிரடி…..!!!!!

மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனேவில் பெற்ற தந்தையே தன் மகளை பாலியல் வன் கொடுமை செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஒடிஷாவை பூர்வீகமாக கொண்ட அந்த குடும்பத்தினர், புனேவுக்கு குடியேறி உள்ளனர். சென்ற சில வருடங்களுக்கு முன் தன் மகளை தந்தை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். மேலும் சிறுமியை பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன் கொடுமை செய்ததாக தெரிகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி தாயின் நண்பர் ஒருவரும் சிறுமியிடம் ஆபாசமாக பேசி அத்துமீறியுள்ளார். சுமார் 4 வருடங்களாக பெற்ற மகள் என்று பாராது தந்தை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரின் இந்த நடவடிக்கைகளால் மனமுடைந்த சிறுமி சமீபத்தில் காவல் நிலையத்தில் புகாரளித்து உள்ளார். அந்த புகாரின்படி போக்சோ உட்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தந்தை, தாய், தாயின் நண்பர் போன்ற 3 பேரையும் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர்.

Categories

Tech |