Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி ஆவணம் தயாரித்து…. ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள உப்பரபாளையம் பஜனை கோவில் தெருவில் எல்லப்பபிள்ளை, குணசுந்தரி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 56 சென்ட் இடம் இருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் குப்பன், சாந்தி, இந்திரா, சேகர், எல்லம்மாள், ராமச்சந்திரன் ஆகியோர் ஆள்மாறாட்டம் மூலம் சதி செய்து போலி ஆவணம் தயாரித்துள்ளனர். இதனையடுத்து கோதண்டம் என்பவருக்கு அந்த இடத்தை அதிகார பத்திரம் செய்து கொடுத்துள்ளனர்.

பின்னர் கோதண்டம் அந்த இடத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்துள்ளார். இதனை அறிந்த குணசுந்தரியும், எல்லப்பிள்ளையும் தங்களது நிலத்தை மீட்டு தருமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். பின்னர் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்திப்பு ராய் ரத்தோர் உத்தரவின் படி போலீசார் மோசடி செய்த கும்பலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |