Categories
மாநில செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை கொடுங்க…. தமிழக அரசு உத்தரவு….!!!!

ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் சொத்துக்களின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பெயரிலும், குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்கள் சொத்துக்களின் விவரங்களை சமர்ப்பிக்க தவறினால் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்து இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் சொத்து விவரங்களை வருகின்ற ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த பதவி நிலை உயர்வு மற்றும் ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்ய வசதியாக முந்தைய ஆண்டுக்கான ஆசையா சொத்து விவரங்களை வருகின்ற ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஐஏஎஸ் அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்க தவறினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது.

Categories

Tech |