Categories
மாநில செய்திகள்

இந்த முறை பொங்கலுக்கு இதெல்லாம் கிடையாது…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

இந்நிலையில் கலந்த முறை 15க்கும் மேற்பட்ட பொருள்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த வருடம் இரண்டு பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகின்றது. பச்சரிசி, வெல்லம் ,முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு மற்றும் பொரி உள்ளிட்ட பொருட்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை மட்டுமே வழங்கப்படுகின்றது.

Categories

Tech |