உலக சுகாதார அமைப்பின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது உலகம் முழுவதும் பரவியது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து மீண்டும் சீனாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கோப்ரயஸ் கூறியதாவது. “சீனாவில் தற்போது அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
எனவே அந்நாட்டு அரசு தடுப்பூசிகள் போடுவதை அதிகரிக்க வேண்டும். அதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்நிலையில் தேவையான உதவிகளை செய்ய உலக சுகாதார நிறுவனம் தயாராக உள்ளது” என அவர் கூறியுள்ளார்.