தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் மணிரத்தினம்- சுகாசினி. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சுகாசினி தன்னுடைய மகன்நந்தனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதோடு தன்னுடைய மகன் நந்தன் லண்டனில் புதிதாக அலுவலகம் திறந்துள்ளதாகவும் நடிகை சுகாசினி பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை பார்த்த திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram