Categories
தேசிய செய்திகள்

பாஜகவை சேர்ந்த நடிகை ஜெயப்பிரதாவுக்கு பிடிவாரண்ட்….‌ உ.பி. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது பாஜக சார்பில் வேட்பாளராக நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார். ஆனால் இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் அசம்கான் தான் வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகை ஜெயப்பிரதா தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி 2 காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கு எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ஜெயப்பிரதா கோர்ட்டில் நேரில் ஆஜராகவில்லை. இதன் காரணமாக நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |