Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு திடீர் கட்டுப்பாடு…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த வருடம் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது. அவ்வாறு ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட் புக்கிங் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது .

இந்நிலையில் சபரிமலையில் வருகின்ற 27ஆம் தேதி நடைபெறும் மண்டல பூஜை நாளில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். வருகின்ற 26 ஆம் தேதி பிற்பகலுக்குப் பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் . அன்றைய தினம் 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனம் முன்பதிவு அனுமதிக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது

Categories

Tech |