Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வைகுண்ட ஏகாதசி முன்பதிவு…. இன்று காலை 9 மணிக்கு….. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் வைகுண்ட ஏகாதேசி என்று நடைபெறும் வைகுண்ட நுழைவு சிறப்பு தரிசனத்திற்கான முன்பதிவு இன்று  காலை 9 மணிக்கு தொடங்கும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருமலையில் உள்ள வைகுண்ட நுழைவு வாயில் ஜனவரி 2 முதல் 11ஆம் தேதி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு 2000 பேர் என மொத்தம் 20 ஆயிரம் பக்தர்கள் இந்த வைகுண்ட நுழைவு வாயிலில் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.

Categories

Tech |