Categories
தேசிய செய்திகள்

COVID 19…. இன்று மத்திய அரசு அவசர ஆலோசனை…. மீண்டும் அமலாகுமா ஊரடங்கு….????

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

பழையபடி கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுமாறும் கொரோனா உறுதியானவர்களின் மரபணுவை சோதனைக்கு உட்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய சுகாதார அமைச்சர் மன்சூர் மாண்டவியா என்று அவசர ஆலோசனை நடத்துகின்றார். இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அதில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |