தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அது மட்டுமின்றி பேரிடர் காலங்களிலும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத்துறை செயலாளர், அனைத்து கடைகளிலும் தரமான பொருள் வழங்கப்படுகிறது. ஆனாலும் சில இடங்களில் சரியாக இல்லை என புகார் வருகிறது. அதை தடுக்கும் வகையிலேயே இரவு நேரத்தில் ரேஷன் பொருட்கள் வாகனத்தில் கொண்டுவர தடைவிதிக்கப்பட்டது என விளமளித்தார்.