தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனயடுத்து இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில்,
சித்தார்த் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து: ஒரு முறை தான் கதை சொன்னாரு. அவர் ஒரு ஒளிப்பதிவாளர் என்பதால் எந்த காட்சி எப்படி இருக்கணும் என்பதை தெளிவாக எடுத்தார்.
சினிமாவில் அழுத்தமான கேரக்டர்களின் நடிப்பது குறித்து: கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் என தொடக்கத்திலேயே நல்ல திரைப்படங்கள் கிடைத்தது. என் நடிப்பை பார்த்து பலரும் இயல்பாக நடிக்கிறீங்கன்னு கூறும் போது மகிழ்ச்சியாக இருக்கும்.
எப்ப திருமணம் செய்வீங்க என கேட்டபோது, வீட்டில் எப்போ கல்யாணம் பண்ணிக்குவேன்னு என்று கேட்பார்கள். ஒவ்வொரு முறையும் நிறைய படங்கள் இருக்குன்னு பெரிய லிஸ்ட் சொல்லுவேன். திருமணம் செய்த பிறகும் நடிக்கலாம் என்ற சூழ்நிலைதான் இருக்கு. ஆனால் இப்போது திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. கண்டிப்பாக எல்லோருக்கும் சொல்லிட்டு தான் திருமணம் செய்வேன் என கூறியுள்ளார்.