பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வரும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் சிங்கிளான பேஷ்ரம் ரங் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தீபிகா படுகோனே இதுவரை இல்லாத அளவுக்கு பிகினியில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு தற்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என இந்துக்கள் கூறி வருகிறார்கள்.
ஏனெனில் இந்த பாடலில் தீபிகா காவிநிற பிகினி உடையை அணிந்திருப்பதோடு பேஷ்ரங் என்ற வார்த்தைக்கு வெட்கமற்ற நிறம் என்பது அர்த்தமாம். இதன் காரணமாக இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, மத்திய மந்திரி நரோட்டம் மிஸ்ராவும் பதான் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து படத்தை திரையிட அனுமதி மறுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். அதோடு பாஜக கட்சியின் தலைவர்கள் மற்றும் பாஜகவின் நிர்வாகிகளும் தொடர்ந்து பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில பாஜக முதல்வர் பூபேஷ் பாகல் பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, வாழ்க்கையில் எல்லாத்தையும் துறந்தவர்கள் மட்டும்தான் காவி உடை அணிவார்கள். ஆனால் உணவுக்காக ஆடும் சில குண்டர்கள் காவி உடை அணிந்து திரிகிறார்கள். தீபிகா படுகோனே எதைத் துறந்தார். அவர் காவி உடை அணிந்திருக்கிறார். அவர்கள் பொதுமக்களிடமிருந்து பணத்தை பறிப்பதை தவிர வேறு எதை தியாகம் செய்யப் போகிறார்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார். மேலும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர்களும் பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தொடர்ந்து பாய்காட் பதான் என்ற ஹேஸ்டேக் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.