Categories
மாநில செய்திகள்

“குப்பை லாரிகளுக்கு நேரம் நிர்ணயிக்க வேண்டும்”… வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்…!!!!!

சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் குப்பை லாரிகளுக்கு நேரம் நிர்ணயிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். “அதில் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதாவது பள்ளி,  அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்கக் கூடாது குப்பை லாரிகள் காலை நேரங்களில் இயக்கப்படுவதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பாதிப்படைவதாக கூறி” வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை  லாரிகளை இயக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |