Categories
சினிமா தமிழ் சினிமா

மும்முரமாக நடைபெறும் பொன்னியின் செல்வன்-2 பணிகள்….. வெளிவரும் தகவல்கள்….!!!!

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் குவித்தது. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” 2ஆம் பாகத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் முதல்பாகம் வசூல் சாதனை படைத்திருக்கும் நிலையில், அடுத்த பாகத்தின் காட்சி அமைப்புகளில் பிரமாண்டத்தை மேலும் கூட்டவேண்டும் என அதற்குரிய கிராபிக்ஸ் வேலைகளானது தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையில் ஒரு சில காட்சிகளின் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பும் ஜனவரியில் இருக்கிறது. அதை சென்னையில் செட் போட்டு எடுத்துவிடலாமா (அ) தாய்லாந்து செல்ல வேண்டியிருக்குமா என்பது குறித்தும் படக்குழுவினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்..

Categories

Tech |