சாலை விபத்துக்களில் காயம் அடைந்தவர்களுக்கு முதல் 24 மணிநேரம் இலவச சிகிச்சையளிக்கும் அரசு திட்டத்தை சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் (எஸ்ஜிபிஜிஐஎம்எஸ்) அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் ராஜேஷ் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது, விபத்துக்கு உள்ளானவர்களின் உயிரை காப்பாற்ற இவ்வசதி உதவும்.
மோகன்லால்கஞ்ச் நகரில் வசித்து வரும் ராகுல்சிங், லாரி ஓட்டுநராக உள்ளார். அவர் கடந்த சனிக்கிழமை அன்று காலை சாலை விபத்தில் சிக்கினார். இதனால் அவருக்கு கையில் 4 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு விபத்து ஏற்பட்ட 24 மணிநேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவரிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை” எனஅவர் கூறினார்.