Categories
மாநில செய்திகள்

சுகமான, தரமான கல்வி வேண்டும்!…. 5-ஆம் வகுப்பு வரை இதை உறுதிசெய்யணும்!…. ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

சுகமான, சுமையில்லாத விளையாட்டுடன் கூடிய தரமான கல்வியை மாநில கல்விக் கொள்கை வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, தனியார் பள்ளி மாணவர்கள் 10 கிலோவுக்கும் கூடுதலாக புத்தக பைகளை சுமந்து செல்ல வேண்டி இருக்கிறது. அதிக எடையுள்ள புத்தக பைகளை சுமப்பதால் மாணவர்கள் உடல் வலியால் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி 5ஆம் வகுப்பு வரை வகுப்புகள் தரைதளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

இதையடுத்து தொழிற்கல்வியும், விளையாட்டுக்கல்வியும் கட்டாயமாக்கப்பட வேண்டும். வாரத்துக்கு 2 பாடவேளைகளில் நீதி போதனை வகுப்புகளும் கட்டாயமாக்கப்பட வேண்டும். இத்தகைய சீர்திருத்தங்களின் வாயிலாக பள்ளிக்கு செல்வதை மழலைகளுக்கு இனிமையான அனுபவமாக மாற்றுவதற்கு மாநிலக் கல்விக் கொள்கை வழிவகை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.

Categories

Tech |