தாய்லாந்து வளைகுடா பகுதியில் உள்ள கடற்பகுதியில் தாய்லாந்து நாட்டின் கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் நேற்று நள்ளிரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அந்தப் போர்க்கப்பலில் கடற்படை வீரர்கள் உட்பட 16 பேர் பயணித்துள்ளனர். அப்போது திடீரென புயல் காற்று வீசியதால் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் போர்க்கப்பலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் கப்பலுக்குள் கடல் நீர் புகுந்தது. இந்நிலையில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் கப்பலுக்குள் புகுந்த கடல் நீரை வெளியேற்ற முடியவில்லை.
இதனை தொடர்ந்து அதிக அளவில் கடல் நீர் கப்பலுக்குள் புகுந்ததால் கப்பல் நடுக்கடலில் மூழ்கத் தொடங்கியுள்ளது. இதில் வீரர்கள் உட்பட அனைவரும் கடலுக்குள் மூழ்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கடற்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கப்பலில் இருந்த 75 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும் கடலில் மூழ்கிய 31 பேர் காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து காணாமல் போன வீரர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.