Categories
உலக செய்திகள்

“சிறப்பு தூதர் பதவியில் இருந்து ஏஞ்சலினா திடீர் விலகல்”…? அகதிகளின் உரிமைக்காக உழைத்தவர்… ஐ.நா பாராட்டு…!!!!!!

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. ஆஸ்கார் விருது பெற்ற இவர் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தில் கடந்த 2001- ஆம் வருடம் முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஐ.நா உயர் ஆணையத்தில் கடந்த 2012 -ஆம் வருடம் அவர் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஏஞ்சலினா ஐ.நா உயர் ஆணையத்துடன் இணைந்து 60-க்கும் மேற்பட்ட களப்பணிகளை மேற்கொண்டுள்ளார். பல்வேறு நாடுகளுக்கு சென்ற அவர் தங்களது சொந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்த கோடிக்கணக்கான மக்களின் அவலத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் ஏமன் மற்றும் புர்கினா பாசோ போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்கு இடம் பெயர்ந்த மக்களை சந்தித்துள்ளார். இதனையடுத்து அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தின் சிறப்பு தூதர் பதவியில் இருந்து ஏஞ்சலினா முன்தினம் திடீரென பதவி விலகியுள்ளார். மேலும் அந்த ஆணையத்தில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “அகதிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் நேரடியாக ஈடுபடுவதற்கும், தீர்வுகளுக்கான அகதிகளின் வருத்தங்களை ஆதரிப்பதற்கும் நான் மாற்று வழியில் வேலை செய்ய வேண்டிய நேரம் இது என நினைக்கின்றேன்.

அதனால் அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவாக வரும் வருடங்களில் என்னால் முடிந்த அனைத்து உதவியும் செய்வேன்” என கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து ஐ.நா கூறியதாவது, “ஏஞ்சலினா அகதிகளின் உரிமைகளுக்காக அயராது உழைத்தார் எனவும் அவர் உலகம் எங்கும் அகதிகளுக்கான விழிப்புணர்வையும் ஆதரவையும் உருவாக்கியுள்ளார்” எனவும் பாராட்டியுள்ளது.

Categories

Tech |