Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை திரிஷாவின் படத்துக்கு தணிக்கை குழு எதிர்ப்பு…. 30 காட்சிகள் நீக்கம்…. என்ன காரணமாக இருக்கும்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பல படங்கள் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் எம். சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள ராங்கி திரைப்படமும் 3 வருடங்களுக்கு பிறகு தற்போது ரிலீசாகிறது. இந்த படம் டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் ராங்கி திரைப்படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிய போது அதில் நிறைய காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து தணிக்கை குழு படத்தை ஏற்க முடியாது என்று கூறி திரும்ப அனுப்பி வைத்துவிட்டது.

இது தொடர்பாக மேல்முறையீட்டு குழுவுக்கு சென்றபோதும் ராங்கி திரைப்படத்தின் சர்ச்சை காட்சிகளை நீக்கினால் தான் அனுமதி தர முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து படத்தில் இருந்து எப்பிஐ, ரா உளவு அமைப்பு, லிபியா, டாலர், அமெரிக்கா போன்ற பெயர்கள் இடம்  பெற்ற 30 காட்சிகளை தணிக்கை குழு நீக்கிவிட்டு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த தகவலை இயக்குனர் சரவணன் கூறியுள்ளார். மேலும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சனையில் வெளிநாட்டு சம்பந்தமான பெயர்கள் இடம் பெற்றிருந்ததால் அது பிரச்சினையை ஏற்படுத்தும் என்று அந்த காட்சிகளை நீக்கியுள்ளனர். இதனால் தான் படம் ரிலீஸ் ஆவதற்கு தாமதமானதாக இயக்குனர் சரவணன் கூறியுள்ளார்.

Categories

Tech |