Categories
தேசிய செய்திகள்

இந்திய கடற்படைக்கு அதிநவீன மர்மகோவா போர்க்கப்பல்… ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை சேர்ப்பு…!!!!!!

ராணுவ மந்திரி ராஜ்நாத்  சிங் மும்பையில் நாளை நடைபெறுகிற விழாவில் அதிநவீன மர்மகோவா போர்க்கப்பலை இந்திய கடற்பறையில் சேர்க்கிறார். இந்தக் கப்பல் முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் இருப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த மர்மகோவா போர்க்கப்பல் இந்திய கடற்படையின் கடல் சார்ந்த திறனை மேம்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி  வருகிறது.

இந்தக் கப்பலின் சிறப்பு அம்சங்கள் ஆவது.

*இந்த கப்பலில் அதிநவீன ரேடார் தரையில் இருந்து புறப்பட்டு சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை, தரையில் இருந்து புறப்பட்டு வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை போன்ற போர் தளவாடங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

*இந்த கப்பலின் நீளம் 163 மீட்டர், அகலம் 17 மீட்டர் ஆகும். இதன் முழுமையான கொள்ளளவில் இதன் எடை 7,400 டன்.

*இந்த கப்பலுக்கு, கோவாவில் உள்ள சரித்திர புகழ்பெற்ற மர்மகோவா துறைமுக நகரின் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது.

*இந்திய கடற்படைக்கான 4 விசாகப்பட்டினம் தர நாசகார கப்பலில் இந்த கப்பல், இரண்டாவது கப்பல் ஆகும். இந்தக் கப்பலை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு கழகம் வடிவமைத்து, மசாகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனம் கட்டியுள்ளது.

*இதில் அணு ஆயுதங்கள், உயிரி  ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் போர் நிலைமைகளில் போரிடுவதற்கு தகுந்த விதமாக அதிநவீன கண்காணிப்பு ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ரேடார்கள் துப்பாக்கி இலக்கு அமைப்புகளுக்கு இலக்கு தரவுகளை வழங்கும்.

*இந்த கப்பலின் நீர்மூழ்கி போர் திறன்கள் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ராக்கெட்  லாஞ்சர்கள், பார்பிடோ லாஞ்சர்கள் ஏ.எஸ்.டபுள்யூ ஹெலிகாப்டர் மூலமாக வழங்கப்படுகிறது.

*மேலும் இதில் அதிநவீன தொலை உணர்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

*இந்த கப்பல் சக்தி வாய்ந்த 4 எரிவாயு விசையாழிகளால் இயக்கப்படுகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 30 கடல் மைல்ஆகும்.

இந்திய கடற்படையில் இந்த அதிநவீன நாசக்கார போர்க்கப்பல் நாளை முறைப்படி இணைகிறது. இதற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமை தாங்கி மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறுகின்ற விழாவில் இந்த கப்பலை கடற்படையில் சேர்க்கின்றார்.

Categories

Tech |