அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, “ஆவின் நெய் விலை உயர்வு மிகுந்த கண்டனத்திற்குரியது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஆவின் பால், ஆவின் தயிர் தற்போது ஆவின் நெய் போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல். அதாவது கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 3 முறை நெய் விலையை உயர்த்தி ஒரு லிட்டருக்கு ரூ.115 வரை அதிகப்படுத்தி இருப்பது நியாயமானது அல்ல. இதுதான் முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதா?” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Categories
“ஒரே ஆண்டில் 3 முறை நெய் விலை உயர்வு”… டி.டி.வி தினகரன் கடும் கண்டனம்…!!!!!
