தென்காசி மாவட்டத்தில் உள்ள அவனிகுனேந்தல் கிராமத்தில் கலைவாணன் என்பவர் வசித்து வருகிறார். ஐ.டி.ஐ படித்து முடித்த கலைவாணன் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து லடாக் வரை நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். கடந்த மாதம் 18-ஆம் தேதி தான் படித்த கழுகுமலை அரசு மேல்நிலை பள்ளியில் இருந்து கலைவாணன் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு ஓசூர் வந்த கலைவாணனை அவரது நண்பர்கள் வரவேற்று இரவு தங்க வைத்தனர். பின்னர் நேற்று ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து கலைவாணன் நடைபயணத்தை தொடங்கினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, தினமும் 30 முதல் 50 கிலோமீட்டர் தூரம் நடைபயணமாக செல்கிறேன். எனக்கு நண்பர்கள் உதவியாக இருக்கின்றனர். ஓசூரில் வைத்து ஈரோட்டை சேர்ந்த மாணவர் முகிலன் என்பவரும் கலைவாணன் உடன் நடைபயணத்தில் இணைந்துள்ளார். ஏற்கனவே ஈரோட்டில் இருந்து முகிலன் லடாக் வரை நடை பயணமாக சென்ற போது கடும் பனிப்பொழிவு காரணமாக திரும்பி வந்துவிட்டார். தற்போது இன்ஸ்டாகிராம் மூலம் கலைவாணன் செல்வதை அறிந்த முகிலன் அவருக்கு உதவியாக தானும் சொல்வதாக தெரிவித்துள்ளார்.