Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகனின் ஏ.டி.எம் கார்டை எடுத்து சென்ற தாய்…. நூதன முறையில் மோசடி செய்த நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 20-வது தெருவில் அங்கம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகன் கார்த்திகேயனின் ஏ.டி.எம் கார்டை எடுத்துக்கொண்டு பணம் எடுப்பதற்காக எம்.கே.பி நகர் 1-வது தெருவில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் ஏ.டி.எம் கார்டை சொருகி பணம் எடுக்க முயன்ற போது பணம் வரவில்லை. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் அங்கம்மாள் உதவி கேட்டுள்ளார். அவரும் ஏ.டி.எம் கார்டை வாங்கி எந்திரத்தில் சொருகி பணம் வரவில்லை என கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த நபர் வேறு ஒரு ஏ.டி.எம் கார்டை அங்கமாளிடம் கொடுத்து அனுப்பினார். சிறிது நேரத்தில் கார்த்திகேயனின் செல்போனுக்கு வங்கி கணக்கிலிருந்து 12 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து கார்த்திகேயன் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |