எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய நாட்டில் இர்குட்ஸ் பிராந்தியத்தில் உள்ள அங்கார்ஸ்க் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் அங்கார் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் ஆலை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று திடீரென இந்த ஆலையில் தீ பற்றி எரிந்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் 2,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இருப்பினும் இந்த விபத்தில் சிக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.