தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார். அவர் பேசியது கேட்கவே மிகவும் அருவருப்பாக இருந்த நிலையில், அவர் மீது திமுகவினர் மூலம் புகார் கொடுக்கப்படும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு மிகவும் மோசமாக ஒரு அமைச்சராக இருந்தவர் இப்படி எல்லாம் பேசுவாரா ? என்று முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு தமிழக முதல்வரின் குடும்பத்தை.. முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு நிகழ்வை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது:
நடிகைகளின் பின்னாலே சுத்தி கொண்டிருந்த உதயநிதி. நயன்தாரா கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை முயற்சி வரை போன உதயநிதி, இன்னைக்கு தமிழ்நாட்டின் உடைய அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு தகுதியுள்ளவர். அவர் சொல்படிதான் நாங்கள் கேட்போம். நயன்தாராக்கு போயி பீடிங் பாட்டில் வாங்கி கொடு. இரண்டு குழந்தை உள்ளது.
நீ ஒரு குழந்தையை தாலாட்டு, துரைமுருகன் ஒரு குழந்தையை தாலாட்டடும். ஸ்டாலின் காலை நக்கி குடிக்கிறார்களே இவங்க தான். உதயநிதி ஸ்டாலின் காலை கழுவி குடிக்கிறது, கனிமொழி காலை கழுவி குடிக்குறது, துர்கா காலை கழுவி குடிப்பது. அண்ணா திமுக என்னைக்குமே சுயமரியாதையோடு இருப்போம். ஸ்டாலின் ஒரு கைப்பாகை, ஒரு பொம்மை, ஒரு ரிமோட் கண்ட்ரோல், அதற்காக எதுவும் தெரியாது.
யாரும் கீ கொடுத்தா ஆடும்… உட்காரு என சொன்னால் உக்காரும், நின்னு என சொன்னால் நிக்கும். பேண்ட் குள்ளே கையில் போடு என சொன்னா கையை போடும். ஒரு பொம்மை முதலமைச்சர். யார் இந்த அரசை இயக்குவது ? அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மிகவும் தரக்குறைவாக தமிழக முதல்வரின் குடும்பத்தை விமர்சித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.